பாலஸ்தீனத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கல்லறைகள் ஜாஃப்பா (Jaffa) வில் அக்டோபர் 8 அன்று அவமதிக்கப்ட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.
அங்குள்ள இரண்டு அடக்கஸ்தலங்களில் இருக்கும் 26 கல்லறைகளில் ‘அரபுகளுக்கு சாவு’ போன்ற அரபுகளுக்கு எதிரான வாசகங்களை எழுதி அவற்றை அவமதித்திருப்பதாக கூறப்படுகின்றது.
முன்னதாக அக்டோபர் 3 ஆம் தேதி, பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகிய தூபா ஜாங்காரியா என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்ற மக்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த தீயில் அல்லாஹ்வின் இல்லம் கடுமையாக சேதமடைந்ததோடல்லாமல் அங்கு இருந்த முஸ்லிம்களின் புனித நூற்களும் எரிந்தன.