<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ்முஸ்லிம்</title>
	<atom:link href="http://tamilmuslim.com/ta/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tamilmuslim.com/ta</link>
	<description>உலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்</description>
	<lastBuildDate>Fri, 29 Mar 2013 10:45:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	
		<item>
		<title>இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு &#8211; LIVE from Rakkah</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=773</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=773#comments</comments>
		<pubDate>Fri, 15 Mar 2013 09:33:37 +0000</pubDate>
		<dc:creator>TamilMuslim</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=773</guid>
		<description><![CDATA[அரை நாள் இஸ்லாமிய மாநாடு ராக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு!! நாள்: 29-03-2013 ராக்கா, நிகழ்ச்சி நேரம்: Makka Time 4:00 AM to 9:00 PM Live broadcast from Rakkah, Saudi Arabia]]></description>
				<content:encoded><![CDATA[<h3 style="text-align: center;"><span style="color: #ff0000;"><strong>அரை நாள் இஸ்லாமிய மாநாடு</strong></span></h3>
<h3 style="text-align: center;">ராக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு!!</h3>
<p style="text-align: center;">நாள்: 29-03-2013 ராக்கா, </p>
<p>நிகழ்ச்சி நேரம்: Makka Time 4:00 AM to 9:00 PM<br />
<iframe src="http://www.ustream.tv/embed/13764831" width="508" height="368" scrolling="no" frameborder="0" style="border: 0px none transparent;"></iframe><br /><a href="http://www.suvanathendral.com/" style="padding: 2px 0px 4px; width: 400px; background: #ffffff; display: block; color: #000000; font-weight: normal; font-size: 10px; text-decoration: underline; text-align: center;" target="_blank">Live broadcast from Rakkah, Saudi Arabia</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=773</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுய பரிசோதனை</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=755</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=755#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 17:00:46 +0000</pubDate>
		<dc:creator>உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[சுயபரிசோதனை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=755</guid>
		<description><![CDATA[சுய பரிசோதனை ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் நுழைந்திடுவோம் இஸ்லாத்தில் நாம் முழுமையாக.. ஈமானை வளர்த்திடுவோம் நம்மனதில் செழுமையாக.. ஷைத்தானிய செயல்கள் என்பது வழிகேடு.. அவ்வழி தொடர்ந்தால் நமக்கு பெரும்கேடு.. பெயர்தாங்கி முஸ்லிம்களாக வாழவேண்டாம்.. நயவஞ்சகர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம்.. வான்மறையும் நபிமொழியும் செவியேற்ப்போம்.. நாளும் நன்மக்களாய் நாம் வாழ்ந்திடுவோம்.. சன்மார்க்க வழிபேணி எந்நாளும் நடந்திடுவோம்.. நன்மை ஏவி தீமையை நாம் தடுத்திடுவோம்.. மார்க்கம் அனுமதித்ததை நாம் அமல் செய்வோம்.. விலக்கியவற்றிலிருந்து நாம் விலகிக் கொள்வோம்..]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>சுய பரிசோதனை</strong><br />
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</p>
<p>நுழைந்திடுவோம் இஸ்லாத்தில் நாம் முழுமையாக..<br />
ஈமானை வளர்த்திடுவோம் நம்மனதில் செழுமையாக..</p>
<p>ஷைத்தானிய செயல்கள் என்பது வழிகேடு..<br />
அவ்வழி தொடர்ந்தால் நமக்கு பெரும்கேடு..<span id="more-755"></span></p>
<p>பெயர்தாங்கி முஸ்லிம்களாக வாழவேண்டாம்..<br />
நயவஞ்சகர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம்..</p>
<p>வான்மறையும் நபிமொழியும் செவியேற்ப்போம்..<br />
நாளும் நன்மக்களாய் நாம் வாழ்ந்திடுவோம்..</p>
<p>சன்மார்க்க வழிபேணி எந்நாளும் நடந்திடுவோம்..<br />
நன்மை ஏவி தீமையை நாம் தடுத்திடுவோம்..</p>
<p>மார்க்கம் அனுமதித்ததை நாம் அமல் செய்வோம்..<br />
விலக்கியவற்றிலிருந்து நாம் விலகிக் கொள்வோம்..</p>
<p>நாம் செய்யாததை பிறருக்கு சொல்ல வேண்டாம்..<br />
அல்லாஹ்வின் வெறுப்பிலே நாம் வீழவேண்டாம்..</p>
<p>மார்க்கத்தை நம் வாழ்வு முழுதும் பிரதிபலிப்போம்..<br />
மாறா ஈமானோடு என்றும் நாம் வாழ்ந்திடுவோம்..</p>
<p>அளவிடுவோம் நம் செயல்களை மார்க்க நெறிகளோடு..<br />
அழகாக்கிடுவோம் நம் வாழ்வை மரண சிந்தனையோடு..</p>
<p>செய்து கொள்வோம் நம் செயல்களுக்கு சுயபரிசோதனை..<br />
ஈருலக வெற்றிதான் நமக்கு பெரும் சாதனை..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=755</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>விழித்தெழுவீர்</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=751</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=751#comments</comments>
		<pubDate>Thu, 26 Apr 2012 07:32:11 +0000</pubDate>
		<dc:creator>கு. முஹம்மது ஜபருல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[இந்துக்கள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=751</guid>
		<description><![CDATA[விழித்தெழுவீர் ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதிஅரேபியா 1. இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர் &#8211; இறுதிமறை வந்துவிட்டதை அறிந்திடுவீர் &#8211; இறைவன் தந்த சன்மார்க்கத்தை உணர்ந்திடுவீர்! – உங்கள் சொந்தங்கள் யாவருக்கும் உரைத்திடுவீர்! 2. ஆதித்தந்தை ஆதமின் மார்க்கம் இஸ்லாம் &#8211; அதை போதிக்கவே வந்த தூதர் மஹாநூவு – உலகில் சாதிக்க முடிந்தது சகோதர சமத்துவத்தை வாதிக்கவே வளரும் ஏகஇறைத்தத்துவமே! 3. வத்து, சுவாவு, யஹீசு, யஊக் என்று மொத்தமாய் நஸ்ரையும் ஐந்தாய் கூட்டி –]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>விழித்தெழுவீர்</strong><br />
ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதிஅரேபியா</p>
<p>1. இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர் &#8211; இறுதிமறை<br />
வந்துவிட்டதை அறிந்திடுவீர் &#8211; இறைவன்<br />
தந்த சன்மார்க்கத்தை உணர்ந்திடுவீர்! – உங்கள்<br />
சொந்தங்கள் யாவருக்கும் உரைத்திடுவீர்!<span id="more-751"></span></p>
<p>2. ஆதித்தந்தை ஆதமின் மார்க்கம் இஸ்லாம் &#8211; அதை<br />
போதிக்கவே வந்த தூதர் மஹாநூவு – உலகில்<br />
சாதிக்க முடிந்தது சகோதர சமத்துவத்தை<br />
வாதிக்கவே வளரும் ஏகஇறைத்தத்துவமே!</p>
<p>3. வத்து, சுவாவு, யஹீசு, யஊக் என்று<br />
மொத்தமாய் நஸ்ரையும் ஐந்தாய் கூட்டி – உருவ<br />
தத்துவம் சொன்னான் தந்திரசாத்தன் அன்று – பின்<br />
எத்துனை கற்சிலைகள் செதுக்கினர் பலரும் இன்று!</p>
<p>4. ஒவ்வொரு சிலையினுள்ளும் ஒரு கரிய பூதம் சென்று<br />
பவ்வியமாய் அமைந்து பண்ணும் பூசை அலங்காரங்கள்<br />
செவ்விய மலர்தூவி சேர்க்கின்ற நைவேத்தியங்கள்<br />
கவ்விஉண்டு களிப்பானாம் &#8211; கனவுகளில் வருவானாம்!</p>
<p>5. இறைவனுக்கு உருவத்தை இதயக்கற்பனையில் &#8211; நான்கு<br />
மறைகளிலும் காணாத மானிட உருகொடுத்து<br />
குறையில்லா பெரியோனை குகைகளிலே குறுக்கி<br />
உறைவிடம் வகுக்கின்றீர் உண்மையிலே மதிமயங்கி!</p>
<p>6. செப்பினாலே ஓர்சிலையும் செம்பவளம் முத்து சாற்றி<br />
தப்பிலா ஐம்பொன்னில் தருவதும் சிற்பிகளாம்<br />
ஒப்பிலா அப்பெனன்று உரைக்கின்றீர் பலகாலம் &#8211; இறை<br />
எப்போது கேட்டது எனக்கு சிலை வேண்டுமென்று!</p>
<p>7. கண்ணிருந்தும் காணாமல் காதிருந்தும் கேளாமல்<br />
பண்கள் பல பாடினினும் பலவாறு ஆடினினும்<br />
தன்னை உணராத தகைமையது கற்சிலைகள்<br />
உண்மையிது உரைத்தேன் &#8211; உணர்ந்திடுவீர்! விழித்தெழுவீர்!!</p>
<p>8. இறைவனின் படைப்புகளாம் மனிதர்களும் பூதங்களும்<br />
மறையோனை வணங்குதற்கு மறுத்திட்ட இவற்றினுள்<br />
குறைமதி கொண்ட கொடும்பூதம் அதன் செயல்கள்<br />
வரையின்றி கீழ்வான் வரையும் செல்லுவதாம்!</p>
<p>9. இறைத்தூதர் இபுறாஹீமை பிரஹ்மா என்றழைத்தீர்<br />
மறைகூறும் சாராவை சரஸ்வதியாய் சிலை சமைத்தீர்<br />
அறைகூவல் விடவில்லை அன்புடன் அழைக்கின்றேன்<br />
புரையோடிய சிலைவணக்கம் பொதுவாய் களையெடுப்பீர்!</p>
<p>10. பாமர மக்களுக்கு பார்த்துக்கொள்ள சிலைகள்தானாம்<br />
படித்த பண்டிதர்க்கு பார்க்கவிலா பரம்பொருளாம்<br />
கூனல் விழுந்த இக்கொள்கை வெளிவேஷம்தானாம் &#8211; இது<br />
வானம் இடியும் நாள் வந்திடினும் மாறாதோ!</p>
<p>11. ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்<br />
நன்றே அறிவுறுத்தும் நல்லபல செய்திகளும்<br />
குன்றில் விளக்குபோல் கூறிநிற்கும் பாடல்களும்<br />
இன்றுவரை கேட்டிடினும் இதயத்தில் ஆழ்த்தவில்லை!</p>
<p>12. கலைமகளாம் திருமகளாம் காத்துநிற்கும் மலைமகளாம்<br />
சளையாது பெண்பாலை சாற்றிச் சொல்லல் பாவம் அன்றோ!<br />
விளைவுகள் அத்தனையும் அறிந்த வித்தகனாம் இறைவனுக்கு<br />
பலபெயர்கள் இட்டிடினும் பாலேதும் இல்லையன்றோ!</p>
<p>13. சிலைவணக்கம் அத்தனையும் சீறாய் ஒழித்துவிட்டு<br />
தலைவணங்க தேவையில்லை தனியொரு மாந்தருக்கு<br />
விலைமதிப்பில்லா வழிபாடு சிரவணக்கம் &#8211; இது<br />
தலைவனாம் அல்லாஹ்வை தவிர வேறுயார்க்கும் இல்லை!</p>
<p>14. எப்பாவமும் நாடியோர்க்கு எனதிறைவன் மன்னிப்பான்<br />
ஒப்பாத இணைவைப்பை ஒருகாலும் மன்னிக்கான்<br />
தப்பாக வழிகாட்டும் தலைவர்களாம் மதகுருக்கள்<br />
செப்பாக உருகிநிற்கும் செந்நரகில் சேர்வோரே!</p>
<p>15. இறையுண்டு இஸ்லாத்தில் இருள்சேர்க்கும் சிலையில்லை<br />
மறையுண்டு மார்க்கத்தில் மனிதத்தில் பிளவில்லை<br />
நெறியூட்டும் வேதத்தின் நேரிய அழைப்பேற்று<br />
சரிகண்டு நீங்களெல்லாம் சார்ந்திடுவீர் ஓர்இறையை!</p>
<p><strong>குறிப்பு :</strong></p>
<p style="text-align: justify;">1. இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்கள் இந்து வேதங்களிலும், உபனிஷங்களிலும் &#8216;மஹா நூவு&#8217; என்றும், &#8216;மனு&#8217; என்றும் அறியப்படுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">2. இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களின் ஓரிரைக் கொள்கைப் பிரசாரத்துக்கு முன்பே, அந்நாட்டில் வாழ்ந்த சிறந்த மனிதர்களாய் இருந்த வத்து, சுவாவு, யஹீசு, யஊக் மற்றும் நஸ்ர் என்ற ஐவருக்கும் சிலைகளை ஏற்படுத்தி மரியாதை செய்யவேண்டும் என்று ஷைத்தான் (சாத்தன்) அந்நாட்டு மக்களிடம் கூறினான். ஆதை அம்மக்கள் செயல்படுத்தினர். சிலைவணக்கம் அந்நாட்களிலிருந்து தோன்றியது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=751</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=745</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=745#comments</comments>
		<pubDate>Thu, 19 Apr 2012 08:41:34 +0000</pubDate>
		<dc:creator>உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[தொழுகை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=745</guid>
		<description><![CDATA[உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்.. எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்.. போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்.. தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்.. உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.. ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்.. மறுமையில் முதல் விசாரணை தொழுகையை]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..</strong></p>
<p>ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</p>
<p>மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்..<br />
படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்..</p>
<p>குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..<br />
இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..<span id="more-745"></span></p>
<p>எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்..<br />
போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்..</p>
<p>தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்..<br />
உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..</p>
<p>தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்..<br />
ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்..</p>
<p>மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே..<br />
தொழுகை நம் ஈமானை மேலும் உறுதியாக்குகிறதே..</p>
<p>தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே..<br />
மானக்கேடானவற்றிலிருந்து நமை காத்திடுமே..</p>
<p>தொழுகை தீய காரியங்களை களைந்திடுமே..<br />
இறைவனின் மன்னிப்பை பெற்று தந்திடுமே..</p>
<p>இறுதி தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமைந்திடுமே..<br />
நமை எல்லாம் மார்க்கச் சகோதரர்கள் ஆக்கிடுமே..</p>
<p>தொழுகையை விடுவது இணைவைப்போரில் ஒருவராய் நமை ஆக்கிவிடும்..<br />
ஸகர் நரகத்தில் நமை நுழையச் செய்துவிடும்..</p>
<p>தொழுகையை விடுவோர் இறைநிராகரிப்பாளாராக ஆகிவிடுவர்..<br />
மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றோரோடு எழுப்பப்படுவர்..</p>
<p>தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எண்ணாதீர்..<br />
அறிவில்லாத மக்களில் ஒருவராக நீங்கள் ஆகிவிடாதீர்..</p>
<p>தொழுகையை விடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திடுங்கள்..<br />
மனம்வருந்தி ஏகஇறையிடம் பாவமன்னிப்பு தேடிடுங்கள்..</p>
<p>தொழுகை இறைநம்பிக்கையாளருக்கு கடமையாகும்..<br />
அல்லாஹ்விற்கு இது மிக விருப்பமான செயலாகும்..</p>
<p>வாருங்கள் சகோதரர்களே.. தொழுதிடுவோம்..<br />
மார்க்க கடமையினைப் பேணி நடந்திடுவோம்..</p>
<p>நமக்கு தொழுகை நடக்கும் முன் நாம் தொழுதிடுவோம்..<br />
ஸகர் நரகத்திலிருந்து நம்மை காத்திடுவோம்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=745</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>நட்பு</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=742</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=742#comments</comments>
		<pubDate>Thu, 19 Apr 2012 08:26:14 +0000</pubDate>
		<dc:creator>உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>
		<category><![CDATA[பகைமை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=742</guid>
		<description><![CDATA[நட்பு ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு.. சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு.. துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு.. வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு.. வெறும் வார்த்தைகளின் கோர்வையல்ல நட்பு.. நம் வாழ்கையோடு பிணைய வேண்டும் நட்பு.. நட்பென்று அன்னிய ஆடவரும் பெண்டிரும் தனித்திருக்காதீர்.. நட்பென்ற போர்வையில்தான் ஷைத்தானும் உடனிருப்பான் மறவாதீர்.. நண்பர்களோடு அளவாய் நேசம் கொள்ளுங்கள்.. பகைவர்களோடும் அளவாய் பகைமை பாராட்டுங்கள்.. நண்பரும் பகைவராய் மாறிடலாம்..]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong>நட்பு</strong></p>
<p style="text-align: justify;">ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</p>
<p style="text-align: justify;">சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு..<br />
சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு..</p>
<p style="text-align: justify;">துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு..<br />
வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு..<span id="more-742"></span></p>
<p style="text-align: justify;">வெறும் வார்த்தைகளின் கோர்வையல்ல நட்பு..<br />
நம் வாழ்கையோடு பிணைய வேண்டும் நட்பு..</p>
<p style="text-align: justify;">நட்பென்று அன்னிய ஆடவரும் பெண்டிரும் தனித்திருக்காதீர்..<br />
நட்பென்ற போர்வையில்தான் ஷைத்தானும் உடனிருப்பான் மறவாதீர்..</p>
<p style="text-align: justify;">நண்பர்களோடு அளவாய் நேசம் கொள்ளுங்கள்..<br />
பகைவர்களோடும் அளவாய் பகைமை பாராட்டுங்கள்..<br />
நண்பரும் பகைவராய் மாறிடலாம்.. சில நேரம்..<br />
பகைவரும்; நண்பராய் சேர்ந்திடலாம்..</p>
<p style="text-align: justify;">நல்ல நட்பிற்கு உதாரணம் அத்தர் வியாபாரி போன்றது..<br />
அதன் வாசனை நம்மீது பரவுமே..<br />
தீய நட்பிற்கு உதாரணம் கொல்லற் பட்டறை போன்றது..<br />
அங்குள்ள நெருப்பும் நாற்றமும் நம்மீது படருமே..</p>
<p style="text-align: justify;">நட்பை பகுத்தறிந்து தேர்ந்தெடுக்க வேண்டுமே..<br />
நட்பினால் குணங்கள் நமக்குள் ஊடுறுவுமே..</p>
<p style="text-align: justify;">வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை நீங்கள் அறிந்திடுங்கள்..<br />
இதுபோல் நட்பை பேணி நன்மக்களாய் வாழ்ந்திடுங்கள்;..</p>
<p style="text-align: justify;">நபிகளார் இறைச்செய்தி முதலில் பிரகடனம் செய்தபோது..<br />
நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சான்று பகர்ந்த நட்பு..</p>
<p style="text-align: justify;">மக்கத்து குரைஷிகள் நபிகளாரை தாக்கியபோது..<br />
தடுத்து தன்னை கேடயமாக்கி நின்ற நட்பு..</p>
<p style="text-align: justify;">நபிகளார் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது..<br />
இறைவன் அனுமதியோடு சேர்ந்து சென்ற நட்பு..</p>
<p style="text-align: justify;">தவ்ர் என்னும் குகையிலே தஞ்சமடைந்த போது.<br />
இருவரில் ஒருவராய் இருந்த நட்பு..</p>
<p style="text-align: justify;">உற்ற நண்பராய் அறிவிப்பதென்றால் இவரை அறிவிப்பேன்..<br />
நபிகளார் இவ்வாறு சிலாகித்து கூறிய நட்பு..</p>
<p style="text-align: justify;">குன்றின் மேலிட்ட விளக்காய்..<br />
என்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நட்பு..</p>
<p style="text-align: justify;">நபி பெருமானாருக்கும்  அபூபக்கர்(ரலி)க்கும்..<br />
நடுவே பிணைந்திருந்த சகோதர நட்பு..<br />
செதுக்கிடுங்கள் இச்சிறப்பினை சிந்தனையிலே..<br />
செம்மையாய் நுழைத்திடுங்கள் நும் சிந்தையிலே..</p>
<p style="text-align: justify;">மார்க்கம் காட்டிய நட்பின் இலக்கணத்தை அறிந்திடுவோம்..<br />
நன்மக்களை அறிந்து நட்பு கொண்டிடுவோம்..<br />
இறைவனுக்காக மட்டுமே அவர்களை நேசம் கொள்வோம்..<br />
மறுமையில் அர்ஷின் நிழலிலே நாம் தங்கிடுவோம்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=742</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>எது வெற்றி?</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=738</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=738#comments</comments>
		<pubDate>Wed, 28 Mar 2012 11:47:02 +0000</pubDate>
		<dc:creator>கு. முஹம்மது ஜபருல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[மரண சிந்தனை]]></category>
		<category><![CDATA[மறுமை சிந்தனை]]></category>
		<category><![CDATA[மார்க்க அறிவு]]></category>
		<category><![CDATA[வெற்றி]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=738</guid>
		<description><![CDATA[எது வெற்றி?       ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதி அரேபியா.  1. ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் கற்க பள்ளியினில்   சென்று நிதம் அகரமுன் சேரப்பதற்கு மெய்யெழுத்தும்   நன்று கற்றுத் தேர்ந்து பின் நன் மதிப்பெண் பலவும் பெற்று   வென்று வந்தேன் முதல்வனாக வியன்தகு கையெழுத்தால்! 2 என தன்னை சொல்லவில்லை எங்ஙனம் கற்பதென்று   உனதிஷ்டம் போல் என்பாள் ஒருபோதும் என்னைக்கடியாள்   மனதிற்குள் வாழ்த்துவதும் மறையோதி வேண்டுவதும்]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>எது வெற்றி?      </strong><br />
ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதி அரேபியா. </p>
<p>1. ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் கற்க பள்ளியினில்<br />
  சென்று நிதம் அகரமுன் சேரப்பதற்கு மெய்யெழுத்தும்<br />
  நன்று கற்றுத் தேர்ந்து பின் நன் மதிப்பெண் பலவும் பெற்று<br />
  வென்று வந்தேன் முதல்வனாக வியன்தகு கையெழுத்தால்!<span id="more-738"></span></p>
<p>2 என தன்னை சொல்லவில்லை எங்ஙனம் கற்பதென்று<br />
  உனதிஷ்டம் போல் என்பாள் ஒருபோதும் என்னைக்கடியாள்<br />
  மனதிற்குள் வாழ்த்துவதும் மறையோதி வேண்டுவதும்<br />
  தனதுமகன் சான்றோனாய் தான்வளர மகிழ்திருப்பாள்!</p>
<p>3 அறிவியலா புவியியலா ஆற்றல் மிகு உளவியலா<br />
  செறிவான உடலியலா சீர்பெற்ற இயல்பியலா &#8211; நன்கு<br />
  புரிகின்ற வேதியலா ஏதும்புரியாத தத்துவமா<br />
  சரி கண்டு பகுத்துணர்ந்து சார்ந்துவிட்டேன் பொறியியலை!</p>
<p>4 பொறியியலில் வேதியலை புகுத்திவிட்ட பாடத்திட்டம்<br />
  விரிவுரையும் தெளிவுரையும் விளக்குகின்ற சோதனைகள்<br />
  தெரிந்து தேர்ந்து என் வகுப்பில் தெரியாத பலருக்கும்<br />
  வரிந்து கொண்டு படிப்பித்தேன் வருசையாய் சாதனைகள்!</p>
<p>5 ஆண்டுகள் ஐந்ததனை அண்ணாமலையில் கழித்து விட்டு<br />
  மாண்ட என் தந்தையின் மனத்துயரம் தேற்றிவிட்டு<br />
  பூண்ட வைராக்கியத்தால் பொலிவோடு தேர்வெழுதி<br />
  தாண்டி அக்கரை சேர்ந்தேன் தனிமகனாய் ஒளிபெற்று!</p>
<p>6 சென்னையின் இந்தியத் தொழிநுட்பக்கழகத்தில்<br />
  என்னையும் இணைத்திடவே இருமடங்காய் உழைத்து<br />
  கண்னை இமைமூடா கடிய பலநாட்கள் சென்று<br />
  பொண்னைப் பெற்றது போல் பூரித்தேன் வெற்றிபெற்று!</p>
<p>7 வண்ணப்பூக்களுடன் வனப்புமிகு புள்ளிமானும்<br />
  கண்னைப் பறித்திடும் கானகத்தின் மத்தியிலே<br />
  சென்னையில் தான் உள்ளோமோ சீர்கொண்ட முதுமலையோ<br />
  தன்னை மறக்கடிக்கும் தன் பெயர்தான் கிண்டிகாடோ!</p>
<p>8 துடிப்போடு ஆய்வு செய்து துகளியலின்(*) தேர்வு பெற்று<br />
  படிப்போடு ஆர்வமுடன் பலபாடல்களும் கவியும் கற்று<br />
  நடிப்போடு நாடகங்கள் நல்ல சொல் அலங்காரங்கள்<br />
  வடிப்பதுவும் என்செயலே வாழ்த்துகிறேன் அன்பர்களை!</p>
<p>9 அரேபிய பணிசெய்ய அன்று நான் எண்ணவில்லை<br />
  குறைகண்ட ஒருசிலரை குறிப்பாக ஒதுக்கிவிட்டு<br />
  பறை சாற்றும் புணிதமண்ணில் கால் பதிக்க நன் நாளில்<br />
  மறை காக்கும் இறையோனை மனத்திலாக்கி புறப்பட்டேன்!</p>
<p>10 ஓராண்டோ ஈராண்டோ ஒருவாறு கழித்து விட்டு<br />
  வாராமல் போவேனோ வளமான என் நாட்டிற்கு -உனை<br />
  பாராமல் இருப்பேனோ பரிதவிக்கும் எனதன்னை -மறுத்து<br />
  கூறாமல் துயரத்தில் குடிகொண்டாள் &#8211; என் செய்வேன்?</p>
<p>11 பருவங்கள் மாறினவே பனி, வெயில்,சுழற்காற்று<br />
  வருடங்கள் ஒடினவே வனப்பும் மிக குறைந்த கூற்று<br />
  உருவமும் மங்கினவே ஒடியாட முடிவதில்லை -இனி<br />
  தருணத்தை எதிர்நோக்கி தங்குகிறேன் &#8211; விடியவில்லை!</p>
<p>12 முப்பத்து மூன்றாண்டு முழு வெளிப்பாலைதனின்<br />
  வெப்பத்தில் தோய்ந்து பின் வெண்சாமரமும் வீச<br />
  ஒப்பற்ற எண்னைவள உற்பத்தி நிறுவனத்தில் -ஆகாய<br />
  கப்பலிலே பயணித்த கதைகள் பல சொல்வேனோ?</p>
<p>13 &#8220;போதும்&#8221; என்ற மனமே பொண் செய்யும் மருந்தென்பார்<br />
  போதாது போதாது &#8221; புலம்புவதோ சாத்தனென்பார்<br />
  வாதம் செய்வார் சிலர் வழியேதும் காணாமல் &#8211; பண<br />
  நாதத்தால் கட்டுண்டு நடந்திடுவார் பிற்போக்காய்!</p>
<p>14 பொருள் வேண்டும் இவ்வுலகின் பொலிவான வாழ்விற்கு<br />
  அருள் வேண்டும் அவ்வுலகின் அழியாத பேற்றிற்கு<br />
  பொருள் கொண்டு வாங்கவிலா பெருவாழ்வு சுவனத்தை &#8211; நின்<br />
  அருள் கொண்டு வேண்டுகிறேன் ஆற்றல் மிகு இறையோனே!</p>
<p>15 வெற்றிமேல் வெற்றிதனை இவ்வுலகில் பெற்றிடினும்<br />
  சுற்றியிருப்போரும் சூழலுமே புகழ்ந்திடினும் &#8211; இங்கு<br />
  பெற்ற வெற்றியினால் பெரிதாக ஒன்றும் மில்லை &#8211; அங்கு<br />
  உற்ற துணையாய் நின்று உயிர்காக்கும் மறுமை வெற்றி!</p>
<p>(*) &#8211; துகளியல் &#8211; Particle Technology &#8211; It is my specialization in MTech.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=738</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;அஸதின்&#8217; சீற்றம்</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=731</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=731#comments</comments>
		<pubDate>Wed, 28 Mar 2012 11:28:31 +0000</pubDate>
		<dc:creator>Abu Areej</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கொடுமைகள்]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=731</guid>
		<description><![CDATA[&#8216;அஸதின்&#8217; சீற்றம் பசுமையின் தெவிட்டாத வனப்பு பளிங்கு வெளியாய் விரித்துவைத்த பஞ்சுமெத்தை வான் மேகம் &#8211; எல்லாம் இறை ஈந்த கொடையின் சின்னங்கள்! காலைப் பொழுதில் &#8211; நம் கண்ணத்தை அறைந்து செல்லும் மெல்லிய தென்றலின் நீங்காத சுகம் &#8211; நம்மை மெய்மறக்கச் செய்யும் &#8221;மெகா கிப்ட்&#8221;. சிட்டுக் குருவியின் சின்னச் சின்ன கீதங்களும் மழலைச் செல்வங்களின் மறக்கமுடியா அறுந்த கவிதைகளும் மாமறை தந்தோனின் மற்றுமொரு அருள்! இவற்றையெல்லாம் இன்புற்றிருக்க நாமனைவரும் கொடுத்து வைத்தவர்கள். வேளா வேளைக்கு]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong>&#8216;அஸதின்&#8217; சீற்றம்</strong></p>
<p style="text-align: justify;">பசுமையின் தெவிட்டாத வனப்பு<br />
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த<br />
பஞ்சுமெத்தை வான் மேகம் &#8211; எல்லாம்<br />
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!<span id="more-731"></span></p>
<p style="text-align: justify;">காலைப் பொழுதில் &#8211; நம்<br />
கண்ணத்தை அறைந்து செல்லும்<br />
மெல்லிய தென்றலின் நீங்காத சுகம் &#8211; நம்மை<br />
மெய்மறக்கச் செய்யும் &#8221;மெகா கிப்ட்&#8221;.</p>
<p style="text-align: justify;">சிட்டுக் குருவியின்<br />
சின்னச் சின்ன கீதங்களும்<br />
மழலைச் செல்வங்களின்<br />
மறக்கமுடியா அறுந்த கவிதைகளும்<br />
மாமறை தந்தோனின் மற்றுமொரு அருள்!</p>
<p style="text-align: justify;">இவற்றையெல்லாம் இன்புற்றிருக்க நாமனைவரும் கொடுத்து வைத்தவர்கள். வேளா வேளைக்கு விரும்பிய உணவு, விதம் விதமாய் வாழ்க்கையின் அலங்காரங்கள் என்று எத்துனை கொடைகளை நாம் அனுபவிக்கின்றோம்! அனைத்தும் அல்லாஹ்வின் கொடைகள் என்பதில் சந்தேகமில்லை. உலக இன்பங்களில் நாம் மிதந்து கொண்டிருக்க அங்கோ ஒரு சமூகம்&#8230;&#8230;..?!!</p>
<p style="text-align: justify;">ஆம், சிரியா மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்க்கையில் இவையனைத்தும் தொலைந்து போனதை நினைக்கும் போதே கண்கள் கசிகின்றன. உள்ளத்தின் ஆழத்தில் கவளையின் வேதனை.</p>
<p style="text-align: justify;">காட்டையாளும் &#8216;அஸதின்&#8217; சீற்றம் தேவைக்கேற்பத்தான்! ஆனால் சிரியாவையாளும் &#8216;அஸதின்&#8217; இரத்த வெறி நாட்டின் மைந்தர்களை நாளாந்தம் மடியச் செய்து கொண்டிருக்கின்றன. நடப்புலகத்தின் பக்கங்களில் பதிவு செய்யப்படும் கதைகளில் &#8216;அஸதின்&#8217; அட்டூழியங்கள் நிச்சயம் முதலிடம் பெரும். நீங்காத வடுக்களாய் முஸ்லீம்களின் உள்ளத்தில் மாறிப் போன ஒரு வரலாறு! இன்று சிரியா தேசத்தில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன!</p>
<p style="text-align: justify;">ஈன்ற செல்வங்களை கழுத்து நெறித்து கொல்வதைவிட கொடூரமான இனவெறியாட்டம் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சொந்த நாட்டு மக்களின் உயிரைக் குடித்து தனது ஆட்சி பீடத்தை தற்காத்துக் கொள்ளும் ஒரு சுயநலவாதியின் வெறியாட்டம்!</p>
<p style="text-align: justify;">லெனின், முஸோலினி, ஹிட்லர்&#8230;.. போன்றவர்களின் சிகப்பு வரலாற்றில் இன்றளவும் இரத்தவாடை அகலவில்லை. இவர்களின் வரலாறுகள் கடந்த காலத்தின் சோகவரலாறு! ஆனால் நிகழ்காலத்தின் காட்டுமிரான்டி கதாநாயகனாய் உருவெடுத்த அஸதின் எதிர்காலம் அவஸ்தைப்படும்</p>
<p style="text-align: justify;">அந்த நாட்களைக் காண நாட்கள் இன்னும் தொலைவில் இல்லை என்பதை மட்டும் நன்றாய் உணர முடிகின்றது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=731</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>வட்டி</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=726</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=726#comments</comments>
		<pubDate>Tue, 27 Mar 2012 13:41:24 +0000</pubDate>
		<dc:creator>உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[தடுக்கப்பட்டவைகள்]]></category>
		<category><![CDATA[தீமைகள்]]></category>
		<category><![CDATA[வட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=726</guid>
		<description><![CDATA[வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே.. விஷம் போல நாடெங்கும் பரவி வருதே மீட்டர் வட்டி.. விட்டு மீளமுடியாமல் தவிக்கின்றனரே இதை தினமும் கட்டி.. குட்டிபோட்டு வட்டியும் தான் விரைந்து வளருதே.. ஈடுகொடுக்க முடியா ஏழை உயிர் மரணம் தழுவுதே.. வட்டி]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong>வட்டி</strong><br />
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</p>
<p style="text-align: justify;">உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே..<br />
வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே..</p>
<p style="text-align: justify;">உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே..<br />
உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே..<span id="more-726"></span></p>
<p style="text-align: justify;">விஷம் போல நாடெங்கும் பரவி வருதே மீட்டர் வட்டி..<br />
விட்டு மீளமுடியாமல் தவிக்கின்றனரே இதை தினமும் கட்டி..</p>
<p style="text-align: justify;">குட்டிபோட்டு வட்டியும் தான் விரைந்து வளருதே..<br />
ஈடுகொடுக்க முடியா ஏழை உயிர் மரணம் தழுவுதே..</p>
<p style="text-align: justify;">வட்டி வாங்குவோரின் அவல நிலையை அறிந்திடுங்கள்..<br />
மார்க்க போதனைகளுக்கு நீங்கள் செவி சாய்த்திடுங்கள்..</p>
<p style="text-align: justify;">நெருப்பை யாரும் உண்பதற்கு விளைவீரோ?<br />
வட்டியும் நெருப்பை போன்றது என்று அறிவீரோ?</p>
<p style="text-align: justify;">வட்டியும் வியாபாரம் போன்றதே என்று வாதிடுவாரே இம்மையிலே..<br />
ஷைத்தானால் பீடிக்கப்பட்ட பைத்தியமாய் எழும்பிடுவாரே மறுமையிலே..</p>
<p style="text-align: justify;">வட்டி வாங்கி உண்பவருக்கும்..<br />
வட்டி கொடுத்து வாழ்வோருக்கும்;..<br />
அதை கணக்கு எழுதி கவனிப்போருக்கும்..<br />
அதற்கு சான்று பகர்வோர்க்கும்..<br />
குற்றத்தில் சரிபங்கு உள்ளதே..<br />
தண்டனை அனைவர்க்கும் பொதுவே..</p>
<p style="text-align: justify;">வட்டியினால் ஈட்டிய பொருளுக்கும்..<br />
வட்டி வாங்கி உண்போருக்கும்..<br />
இறைவனின் நேசம் கிடைப்பதில்லை..<br />
அப்பொருளும் அபிவிருத்தி அடைவதில்லை..</p>
<p style="text-align: justify;">வட்டி வாங்கி உண்பதென்பது..<br />
தன் தாயோடு புணர்வதற்கு ஒப்பான செயலாகும்..<br />
நமை நிரந்தர நரகிற்கு இட்டுசெல்லும் வழியாகும்..<br />
இக்கடுமையான எச்சரிக்கை அறிவீரோ?<br />
சிந்தித்து தெளிவு பெற்று மீள்வீரோ?</p>
<p style="text-align: justify;">வட்டியை விட்டு விலகி நீங்கள் வந்திடுங்கள்..<br />
இல்லையெனில்..<br />
இறைவனும்..அவனின் தூதரும் உம்மை சபித்திடுவரே..<br />
உமக்கு எதிராய் போர் பிரகடணம் செய்திடுவரே..</p>
<p style="text-align: justify;">வட்டி ஒரு பெரும் பாவம் என்பதை நாமும் அறிந்திடுவோமே..<br />
மறுமையில் நெருப்பு கற்களை விழுங்காமல் நமை காத்திடுவோமே..</p>
<p style="text-align: justify;">மார்க்கம் காட்டிய வழியில் நாமும் நடந்திடுவோமே..<br />
வட்டி எனும் கொடிய அரக்கனை வீழ்த்திடுவோமே..</p>
<p style="text-align: justify;">அழகியகடன் எனும் வட்டியில்லா உதவி அளித்திடுவோமே..<br />
ஏழைகள் வாழ்வில் ஒளியை நாமும் ஏற்றிடுவோமே..</p>
<p style="text-align: justify;">ஜக்காத் எனும் ஏழை வரியை தவறாமல் வழங்கிடுவோமே..<br />
அழகியகடன் வாய்ப்பினை மேலும் நாம் பெருக்கிடுவோமே..</p>
<p style="text-align: justify;">மார்க்கத்தில் என்றும் உறுதியாக நிலைத்திடுவோமே..<br />
மாறா உண்மை முஃமின்களாக வாழ்ந்திடுவோமே..</p>
<p style="text-align: justify;">ஈமானை மென்மேலும் உறுதியாக்கிடுவோமே..<br />
ஈருலக வெற்றியை நாமும் பெற்றிடுவோமே..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=726</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சொர்க்கம்</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=723</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=723#comments</comments>
		<pubDate>Mon, 26 Mar 2012 07:20:50 +0000</pubDate>
		<dc:creator>உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[தாய்மை]]></category>
		<category><![CDATA[தாய்]]></category>
		<category><![CDATA[பெற்றோர்]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=723</guid>
		<description><![CDATA[சொர்க்கம் ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் கருவிலே எனைச் சுமந்தவளை.. மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை.. தாயின் காலடியிலே சொர்க்கம்.. இது பெருமானாரின் கூற்று.. தாய் காட்டும் பாசமோ.. தெளிந்த நீர் ஊற்று.. உயிர்போகும் வலியினூடே எனை ஈன்றாள்.. என்முகம் பார்த்த அந்நொடிபொழுதில் அவ்வலி மறந்தாள்.. தன்னுயிர் பிணை வைத்து என்னுயிர் ஈன்றவளை.. என் இன்னுயிர் உள்ளவரை.. ஒருபோதும் நான் மறவேன்.. சொன்னால் தான் தெரியும் பிறருக்கு நம் தேவை.. சொல்லாமலே புரியும் அவளுக்கு]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong>சொர்க்கம்</strong><br />
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</p>
<p style="text-align: justify;">கருவிலே எனைச் சுமந்தவளை..<br />
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..</p>
<p style="text-align: justify;">தாயின் காலடியிலே சொர்க்கம்..<br />
இது பெருமானாரின் கூற்று..<br />
தாய் காட்டும் பாசமோ..<br />
தெளிந்த நீர் ஊற்று..<span id="more-723"></span></p>
<p style="text-align: justify;">உயிர்போகும் வலியினூடே எனை ஈன்றாள்..<br />
என்முகம் பார்த்த அந்நொடிபொழுதில் அவ்வலி மறந்தாள்..</p>
<p style="text-align: justify;">தன்னுயிர் பிணை வைத்து<br />
என்னுயிர் ஈன்றவளை..<br />
என் இன்னுயிர் உள்ளவரை..<br />
ஒருபோதும் நான் மறவேன்..</p>
<p style="text-align: justify;">சொன்னால் தான் தெரியும் பிறருக்கு நம் தேவை..<br />
சொல்லாமலே புரியும் அவளுக்கு நம் பார்வை..</p>
<p style="text-align: justify;">கருவறையில் நாம் அவளை எட்டி உதைத்த போதினிலும்..<br />
கனிவுடனே கட்டி அணைத்து முத்தமழை பொழிவாளே..</p>
<p style="text-align: justify;">ஒரு கவள உணவாயினும்..<br />
தான் உண்ணா.. நமக்களித்து..<br />
அகமகிழும் அற்புத ஜீவன் அவள்..</p>
<p style="text-align: justify;">நாம் உச்சரித்த வார்த்தைகளில்<br />
முதல் வார்த்தை அம்மா..</p>
<p style="text-align: justify;">அந்த அன்னையின் அருமை சொல்லி மாளா..<br />
பெருமைகள் எண்ணிளடங்கா..<br />
எழுத இக்கவிதை போதா..<br />
சிந்தனைக்கு சிலவற்றை..<br />
உதிர்க்கின்றேன் உதாரணமாய்..</p>
<p style="text-align: justify;">அவள் உள்ளத்து வெண்மை..<br />
வெண்மையில் தெரியும் மென்மை..<br />
மென்மைக்கு இலக்கணமான பெண்மை..<br />
பெண்மைக்கு பெருமை சேர்க்கும் தாய்மை..<br />
அத்-தாய்மை ஈன்ற மகவு..<br />
அதனால் ஏற்பட்ட உறவு..<br />
அவ்வுறவினால் அடைந்த உவகை..</p>
<p style="text-align: justify;">அவளின் அளப்பறிய பாசம்..<br />
அவள் காட்டிய பரிவு..</p>
<p style="text-align: justify;">அன்னையின் கருணை..<br />
அவள் சொல்லில் தெரியும் கனிவு..<br />
                               <br />
பாலோடு அவள் சேர்தூட்டிய வீரம்..<br />
அவ்வீரத்தினால் நாம் செய்த தீரம்..</p>
<p style="text-align: justify;">அவள் புகட்டிய கல்வி..<br />
அக்கல்வியினால் நாம் பெற்ற அறிவு..<br />
அறிவினால் வளர்ந்த திறமை..<br />
அத்திறமையினால் விளைந்த வெற்றி..<br />
அதைக் கண்டு அவள் அடைந்த பெருமை..<br />
அப்போது அவள் விழியில் அரும்பிய ஈரம்..<br />
இதற்கு உண்டோ பேரம்??</p>
<p style="text-align: justify;">நிகரில்லா அவளின் அன்பு..<br />
அதுவே அவளின் உயரிய பண்பு..</p>
<p style="text-align: justify;">மொத்தத்தில்..<br />
நமக்காகவே உருகும் அவளின் வாழ்வு..<br />
அவளாலே நமக்கு உண்டு மீள்வு..</p>
<p style="text-align: justify;">அன்னைக்கு நாம்பட்ட கடன் என்ன?<br />
அவளுக்கு செய்ய வேண்டி கடமை என்ன?<br />
எண்ணி எண்ணி பார்த்து விட்டேன்..<br />
எண்ண எண்கள் போதவில்லை..<br />
கணக்கிட்டு பார்த்து விட்டேன்..<br />
கண்களிலே கண்ணீர் மழை..</p>
<p style="text-align: justify;">நம் கடமையில் நாம் காட்டவேண்டும் உறுதி..<br />
அதற்கு நாம் கொடுத்து உழைக்க வேண்டும் குருதி..</p>
<p style="text-align: justify;">ஈரைந்து மாதங்கள் அவள் நமைச் சுமந்தாளே!<br />
ஈடேற்றம் பெறுவோமே.. நாம் அவளைச் சுமந்தாலே!</p>
<p style="text-align: justify;">தாயின் காலடியிலே சொர்க்கம்..<br />
இதை தக்க வைத்து கொள்வோமா..தினம் தினமும்???</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=723</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>உரைகல்!</title>
		<link>http://tamilmuslim.com/ta/?p=715</link>
		<comments>http://tamilmuslim.com/ta/?p=715#comments</comments>
		<pubDate>Sun, 25 Mar 2012 11:16:00 +0000</pubDate>
		<dc:creator>உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[பெண்களின் மகத்துவம்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://tamilmuslim.com/ta/?p=715</guid>
		<description><![CDATA[உரைகல்! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் பெற்றோருக்கு புதல்வியாய்.. மணாளனுக்கு மனைவியாய்.. சேய்களுக்கு தாயாய்.. மாமியாருக்கு பொற்குடமாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? கணவனுக்கு ஆடையாய்.. கட்டிலில் காதலியாய்.. இல்லத்து அரசியாய்.. ஆலோசனை வழங்கும் அமைச்சராய்.. ஆறுதல் அளிக்கும் தோழியாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? தன் சொந்தங்கள் பிரிந்து.. என் சொந்தங்கள் ஏற்று.. புது பந்தங்கள் பூத்துக்குழுங்க.. புத்துயிர் அளித்தவளே! எத்தனை பரிமாணங்கள் உனக்கு? கண்களால் கைது செய்து.. உறவாக இணைந்து.. உயிரோடு கலந்து.. உள்ளத்தில் சிறை]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>உரைகல்!</strong></p>
<p>ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்</p>
<p>பெற்றோருக்கு புதல்வியாய்..<br />
மணாளனுக்கு மனைவியாய்..<br />
சேய்களுக்கு தாயாய்..<br />
மாமியாருக்கு பொற்குடமாய்..<br />
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?<span id="more-715"></span></p>
<p>கணவனுக்கு ஆடையாய்..<br />
கட்டிலில் காதலியாய்..<br />
இல்லத்து அரசியாய்..<br />
ஆலோசனை வழங்கும் அமைச்சராய்..<br />
ஆறுதல் அளிக்கும் தோழியாய்..<br />
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?</p>
<p>தன் சொந்தங்கள் பிரிந்து..<br />
என் சொந்தங்கள் ஏற்று..<br />
புது பந்தங்கள் பூத்துக்குழுங்க..<br />
புத்துயிர் அளித்தவளே!<br />
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?</p>
<p>கண்களால் கைது செய்து..<br />
உறவாக இணைந்து..<br />
உயிரோடு கலந்து..<br />
உள்ளத்தில் சிறை வைத்து..<br />
நிழலாக தொடர்ந்து..<br />
நிஜமாக வாழ்பவளே!<br />
எத்தனை பரிமாணங்கள் எடுத்திடினும்..<br />
அனைத்திலும் எனைக் கவர்ந்தவளே!</p>
<p>பெருமானாரின் பொன்மொழிகளில் ஒன்று..<br />
மக்களில் சிறந்தவர்..<br />
தன் மனைவியிடத்தில் சிறந்தவரே!</p>
<p>உன்னில் சிறந்தவனா நான்??<br />
என் குணத்தை உரசிப் பார்க்கும் உரைகல்லாய்..<br />
பண்பை பறைசாற்றும் படிக்கல்லாய்..<br />
நாணயத்தை எடைபோடும் எடைக்கல்லாய்..<br />
இன்னும் எத்தனை பரிமாணங்கள் தான் உனக்கு?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilmuslim.com/ta/?feed=rss2&#038;p=715</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>
